திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ ஊராட்சி செயலரின் பணி என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ கூறுகையில், “தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு ஊராட்சியிலும் செயலராக பணியாற்றுபவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
இதில், அனைத்து அலுவலக ஆவணங்கள் குறித்த விவரங்களை அரசுக்கு, குறித்த நேரத்தில் கொடுத்து வரும் பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சார்ந்த பணிகளும் இடம் பெற்றுள்ளன.
மேலும் கிராம மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக கிராம ஊராட்சி செயலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வகையில் பணி புரியும் செயலர்களுக்கு மாத ஊதியம் பெறுவதில் பல்வேறு சிக்கல்களை சந்திப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 15ம் தேதி சென்னையில் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindigul, Local News