முகப்பு /திண்டுக்கல் /

ரேஷன் சேவையில் குறைபாடு இருக்கா? - திண்டுக்கல் மக்களே இந்த வாய்ப்பை தவறவிட்ராதீங்க..

ரேஷன் சேவையில் குறைபாடு இருக்கா? - திண்டுக்கல் மக்களே இந்த வாய்ப்பை தவறவிட்ராதீங்க..

மாதிரி படம்

மாதிரி படம்

Dindugal Ration Shops : திண்டுக்கல் மாவட்ட மக்கள் குடும்ப அட்டையில் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்ட மக்கள் ரேஷன் சேவை தொடர்பாக குறைகளை மனுவாக அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.06.2023 அன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளில் உள்ள சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் எதிர்வரும் 10.6.2023 (2வது சனிக்கிழமை ) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மேற்படி முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/அட்டை கோரிக்கை மனு . அளிக்கலாம். கைபேசி எண் பதிவு/மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனு அளிக்கலாம். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார் மனு அளிக்கலாம் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் மனு அளிக்கலாம். எனவே, இச்சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மேற்காணும் கோரிக்கை தொடர்பான மனுவினை அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Dindigul, Local News