தருமபுரியில் அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று முதல் ஜூன் 4 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலத்திற்கு பிறகு இளைஞர்கள் கஞ்சா, மது என திசை மாறி போய்விட்டார்கள் என தெரிவித்தார்.
இந்த ஆண்டு அரசு தேர்வுகளில், கடைசியில் உள்ள 15 மாவட்டங்கள் வட மாவட்டங்கள் தான். இந்த பகுதியில் தான் டாஸ்மாக் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. இந்த மாவட்ட மக்களுக்கு என்ன திட்டங்களை அரசு கொடுத்துள்ளது. இது என்ன திராவிட மாடல் அரசு?
மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசு மது விற்பனை செய்யாவிட்டால், கள்ளச்சாராயம் பெருகும் என அரசு மதுக்கடைகளை திறந்துள்ளது. ஆனால் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. இது ஆட்சியாளர்கள், காவல் துறையினர், அரசியல் வாதிகள் எல்லோருக்குமே தெரிந்து தான் நடைபெறுகிறது.
இப்போது உள்ள மதுவிலக்கு துறை அமைச்சர், மக்கள் மீது மதுவை திணித்து வருகிறார். இவர் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை வாங்கி தருவார். வாங்கி தருகிறார். கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் தான் இறந்துள்ளனர். ஆனால் அரசு விற்பனை செய்யும் சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் மது விற்பனையை கொண்டு வந்தது அதிமுக தான். தற்பொழுது 25 வயது இளைஞர்கள் மது இல்லாமல் இருக்கமுடியாது என்றாகிவிட்டது. நாங்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று கேட்கிறோம். ஆனால் இங்கு எங்கும் மது, எதிலும் மது என்று தான் உள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசு? என கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர்- சுகுமார் ரங்கநாதன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dharmapuri, Pmk anbumani ramadoss