முகப்பு /செய்தி /கடலூர் / நடிகைகளுடன் உல்லாசம்... சொகுசு வாழ்க்கை... 60 வயது திருடன் சிக்கியது எப்படி?

நடிகைகளுடன் உல்லாசம்... சொகுசு வாழ்க்கை... 60 வயது திருடன் சிக்கியது எப்படி?

திருடன் கைது

திருடன் கைது

கடலூரில் திருடிய பணத்தில் 2 மனைவி, நடிகைகளுடன் உல்லாசம் என சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த 60 வயது திருடன் போலீசில் சிக்கியிருக்கிறார். 2 மாநில போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடன் சிக்கியது எப்படி?

  • Last Updated :
  • Chennai, India

கடலூர் மாவட்டத்தின் வர்த்தக நகரமான பண்ருட்டி வ.உ.சி நகரை சேர்ந்தவர் சுந்தர். பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு சாலையில் விதைகள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார் சுந்தர். கடந்த 10ம் தேதி நள்ளிரவில் சுந்தர் கடையின் பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை யாரோ திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு வணிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் பண்ருட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கைரேகை மற்றும் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க; Tamil Nadu Budget 2023-24 Live Updates : இன்று தாக்கலாகிறது தமிழ்நாடு பட்ஜெட்..

ஆனால் சிசிடிவியில் சிக்கிய நபர் குறித்து கடலூர், விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. போலீசார் தமிழகம் முழுவதும் தங்களது தேடுதல் பணியை தீவிர படுத்திய நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இந்த சிசிடிவி யில் பதிவான நபர் மீது வழக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை துப்பாக வைத்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தியதில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் சிக்கினார்.

அவரிடம் இருதுந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் சாகுல்ஹமீது மீது மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இவருக்கு மதுரையில் ஒரு மனைவியும், திருவனந்தபுரத்தில் ஒரு மனைவியும் என இரண்டு மனைவிகள் உள்ளனர். மருந்து விற்பனை பிரதிநிதியான சாகுல்ஹமீது இரவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறார். சம்பவத்தன்றும் சென்னை சென்று திரும்பி வந்தபோது பண்ருட்டியில் பேருந்தில் இருந்து இறங்கி உரம் மற்றும் பூச்சி மருந்து கடையில் திருடியிருக்கிறார்.

திருடிய பணத்தில் ஒன்றறை லட்சம் ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் மீதி பணம் எங்கே என போலீசார் கேட்டபோது கூலாக பதில் அளித்துள்ளார் சாகுல் ஹமீது. திருடிய பணத்தை கொண்டு கேரளாவில் சொகுசு விடுதியில் அரை எடுத்து தங்கி அங்கு நடிகைகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுதாகவும், அதில் பணம் செலவாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல இடங்களில் திருடிய பணத்தை நடிகைகள் இடமே கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார். 60 வயதில் உல்லாசமாக இருந்ததை போலீசார் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அதன் பிறகு அவர் கொடுத்த எண்களில் எல்லாம் போலீசார் சோதனை செய்தபோது அது உண்மை என்றே தெரியவந்துள்ளது.

top videos

    30 ஆண்டுகளாக திருட்டு தொழில் செய்து இரு மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் கடலூரில் சிக்கியிருக்கிறார்.

    First published:

    Tags: Cuddalore, Thief