என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தவும், இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுரங்கத் திட்டமிடல் துறை வழிகாட்டுதலின்படி, தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிலக்கரி வெட்டுவதற்குத் தேவையான கையகப்படுத்திய நிலங்கள் கையிருப்பில் இல்லை என்றும், இதனால் பழுப்பு நிலக்கரி உற்பத்தி, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மின்சாரம் தொடர்ந்து உற்பத்தி செய்ய அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேவையான ஆயிரத்து 54 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது என்றும், நில எடுப்பால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படுவதாகவும், நாட்டில் அதிகப்படியான இழப்பீடு கொடுக்கும் முதல் பொதுத்துறை நிறுவனம் என்எல்சி என்றும் விளக்கம் அளித்துள்ளது. நில உரிமையாளர்களுக்கும், கடலூர் மாவட்ட மக்களுக்கும் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electricity, NLC