முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் ஒரே நாளில் 30 தாசில்தார்கள் இடமாற்றம்... மாவட்ட ஆட்சியர் அதிரடி

கோவையில் ஒரே நாளில் 30 தாசில்தார்கள் இடமாற்றம்... மாவட்ட ஆட்சியர் அதிரடி

பணியிட மாற்றம்

பணியிட மாற்றம்

Coimbatore | கோவையில் 30 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முழு விபரம் இதோ...

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில்  30 தாசில்தார்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:-

கோவை வடக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரராக யமுனா, தெற்கு கலால் மேற்பார்வை அலுவலராக ராஜேஸ்குமார், கூடுதல் பொறுப்பில் ரமேஷ், வடக்கு நகர நிலவரித் திட்டம் தனி தாசில்தாரராக உமா மகேஸ்வரி, அன்னுார் வட்டம் சமூக பாதுகாப்புத் திட்டம் தனி தாசில்தாரராக புனிதவதி, மதுக்கரை வட்டம் சமூக பாதுகாப்புத் திட்டம் தனி தாசில்தாரராக மேகலா ஆகியோரும் தற்போது உள்ள பணியிடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், பாதுகாப்பு தொழில் பூங்கா (டிட்கோ) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் தனி தாசில்தாரராக பத்மாவதி, தெற்கு நகர நிலவரித் திட்டம் தனி தாசில்தாரராக கிருஷ்ணவேணி, நகர்புற நிலவரி வசூல் தனி தாசில்தாரராக குமரி ஆனந்தன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனி தாசில்தாரராக ராஜா, தெற்கு குடிமைப் பொருள் தனி தாசில்தாரராக சர்மிளா, கோவை தெற்கு தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் கிடங்கு மேலாளராக ராஜன், கூடுதல் பொறுப்பில் குமார், தெற்கு கோட்ட கலால் அலுவலராக கனகேஸ்வரி. கலெக்டர் அலுவலகம் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாரராக சரவணன், வடக்கு வட்டம் தாசில்தாரராக தங்கராஜ் ஆகியோரும் தற்போது உள்ள பணியிடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல அன்னுார் வட்டம் தாசில்தாரராக காந்திமதி, சூலுார் வட்டம் தாசில்தாரராக நித்திலவல்லி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் பாதுகாப்பு தொழில் பூங்கா (அலகு 1) தனி தாசில்தாரராக உமா பரமேஸ்வரி, ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தாரராக மாலதி ஆகியோரும் தற்போது உள்ள பணியிடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் விமான ஓடுதள விரிவாக்கம் (அலகு 2) தனி தாசில்தாரராக மல்லிகா, அரசு கேபிள் டி,வி., தனி தாசில்தாரராக தமிழ்ச்செல்வி என  மொத்தம் 30 பேர் தற்போது உள்ள பணியிடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவலை, கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Coimbatore, Local News