கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ துவக்கப்பள்ளியில் கோவை மாவட்ட ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் சார்பில் தகவல் பெறும் உரிமைச்சட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் மதுரை ஆர்.டி.ஐ ஹக்கீம் பங்கேற்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் வரலாறு, மனு எழுதும் முறை, அதிலுள்ள பிரிவுகள், மேல் முறையீடு வழிமுறைகள், தகவலை எவ்வாறு பெறுவது, பெறப்பட்ட தகவல்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சி வகுப்பில் கோவை, திருப்பூர், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து தெரிந்து கொண்டனர். மேலும் பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் கூறுகையில், தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது என்றும், இந்த சட்டத்தை முறையாக பயன்படுத்தினால் அரசு இயந்திரம் முறையாக இயங்குவதோடு, மக்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்ட முடியும் என்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News, RTI