முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவையில் கண்டெடுக்கப்பட்ட அரியவகை நாகப்பாம்பு... வெள்ளையாய் இருக்க காரணம் இதுதான்..!

கோவையில் கண்டெடுக்கப்பட்ட அரியவகை நாகப்பாம்பு... வெள்ளையாய் இருக்க காரணம் இதுதான்..!

வெள்ளை நாகம்

வெள்ளை நாகம்

கடந்த 2019 ம் ஆண்டு கோவை மதுக்கரை பகுதியிலும், கடந்த ஆண்டு சுந்தராபுரம் பகுதியிலும் அல்பினோ வகை பாம்புகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் அரியவகை வெண்ணிற நாகப்பாம்பை பிடித்த வனத்துறையினர், அதனை அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர்.

கோவை குறிச்சி சக்திநகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 5 அடி நீளமுள்ள வெள்ளை நிற பாம்பு ஒன்று இருப்பதாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற அறக்கட்டளை அமைப்பினர் வெண்ணிற நாகப்பாம்பை காயமின்றி உயிருடன் பிடித்தனர்.

அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட பாம்பு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அடுத்து, அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. அல்பினோ கோப்ரா வகையைச் சேர்ந்த இந்த பாம்பு, நிறமிகளில் ஏற்படும் மரபணு குறைபாடு காரணமாக, வெண்ணிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க; ஓடிடி-யில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி!

top videos

    ஏற்கனவே கடந்த 2019 ம் ஆண்டு கோவை மதுக்கரை பகுதியிலும், கடந்த ஆண்டு சுந்தராபுரம் பகுதியிலும் அல்பினோ வகை பாம்புகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    First published: