முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

கோவை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

மின் தடை

மின் தடை

Coimbatore District | கோவை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (14-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரத்தை கு.வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனுார், கூடலுார் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்து.

Must Read : புஷ்பா படத்தின் ஃபேமஸ்ஸான இந்த சீன் நம்ம தென்காசியில் தான் எடுக்கப்பட்டது - எங்கு தெரியுமா?

இதேபோல மாதம்பட்டி துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளிலும் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News, Power cut, Power Shutdown