முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தில் 13ம் தேதி இங்கெல்லாம் மின் தடை - இதில் உங்க ஏரியா இருக்கா?

கோவை மாவட்டத்தில் 13ம் தேதி இங்கெல்லாம் மின் தடை - இதில் உங்க ஏரியா இருக்கா?

மின் தடை

மின் தடை

Coimbatore District | கோவை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் திங்கட் கிழமை (13-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, திங்கட் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

Must Read : இது சிவபெருமானின் ஏழுமலை... வெள்ளியங்கிரி தென் கைலாய மலையின் சிறப்புகள்!

மின் தடை பகுதிகள்:

கிணத்துக்கடவு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட லட்சுமி நகர், இம்மிடிபாளையம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஒருபகுதி, மில் கோவில்பாளையம் ஒருபகுதி, சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், ஆதியூர், ஜமீன் காளியாபுரம், களத்துார், கானல்புதுார் மற்றும் பெரும்பதி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News, Power cut, Power Shutdown