உச்சநீதிமன்றத்தின் அனுமதி உத்தரவை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி ஞாயிறு அன்று நடைபெற்றது. அந்தவகையில் கோவையிலும் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து தேர்நிலை திடல் வரை ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது.
அப்போது, நீதிமன்ற நிபந்தனைகளை மீறி கைகளில் தடி பயன்படுத்தியதாகவும், பொது கூட்டத்தில் சிலம்பு குச்சிகளுடன் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் சுகுமார், மாவட்ட இணைச் செயலாளர் குமார், ஊடகத் தொடர்பாளர் விஜயகுமார், செயலாளர் முருகன் உள்ளிட்டோர் மீது வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த காவல்துறை, மற்ற மதங்கள், சாதிகளைப் பற்றிப் பேச கூடாது, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் பொறுப்பேற்க வேண்டும் என்றும், லத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட 12 நிபந்தனைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: RSS