முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / புலம்பெயர் தொழிலாளி கட்டையால் அடித்து கொலை... கோவையில் பயங்கரம்!

புலம்பெயர் தொழிலாளி கட்டையால் அடித்து கொலை... கோவையில் பயங்கரம்!

கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை

கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை

Coimbatore murder | சடலத்தை கைப்பற்றிய போலீசார், கொலை செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள ரமணிமுதலிபுதூர் பிரிவு பகுதியில் புலம்பெயர் தொழிலாளர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்துள்ள ரமணிமுதலிபுதூர் பிரிவு பகுதியில் முகம் மற்றும் தலைப்பகுதியில் ரத்த காயங்களுடன் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக கோட்டூர் காவல் நிலைய போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாட் மாஞ்சி 31 வயது வட மாநில தொழிலாளி என்பது உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 15 நாட்களாக பணி செய்து வருவதாகவும் இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள மக்கள் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் இவரை கட்டையால் பலமாக தாக்கியதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளதும் தெரிய வந்தது.

தற்போது சிவ்தாட் மாஞ்சி உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனார்.

இதையும் படிங்க : ஏசி, ஏர் கூலர் இல்லாமலே உங்கள் வீட்டை குளுர்ச்சியா வச்சுக்கனுமா..? தினமும் இரவு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கொலை நடந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டு அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

top videos

    செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி.

    First published:

    Tags: Attack, Coimbatore, Crime News, Murder