கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி கோவை பேரூர் படித்துறையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி படித்துறையை ஜொலிக்க வைத்தது காண்போரை வெகுவாக கவர்ந்தது.
கார்த்திகை தீப திருநாளில் அவரவர் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் கார்த்திகை தீப விழாவான நேற்று மாலை திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டதையடுத்து தமிழகம் முழுக்க உள்ள கோவில்களும், இல்லங்களிலும் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்நிலையில் கோவையில் உள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி படித்துறையை ஜொலிக்க செய்தனர்.
கோவையில் முக்கிய ஆறாக விளங்கு கூடிய நொய்யல் ஆற்றின் பெருமையை பறைசாற்றும் வகையில் "நொய்யல்" என எழுத்து வடிவில் தீபங்களால் வடிவமைத்தது அங்கு வந்த அனைவரையும் கவர்ந்தது.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கடந்த பல வருடங்களாக கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை தூய்மைப்படுத்துவது, ஆற்றங்கரை பகுதிகளில் மரம் நடுவது போன்ற செயல்களை முன்னெடுத்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உங்க MLA, கவுன்சிலர் பேரு தெரியுமா? - கோவை இளசுகளுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு..!
இதுகுறித்து பேசிய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், நொய்யல் மிக முக்கியமான ஆறாக விளங்குவதாகவும் , ஆறுகளை வழிபடும் முறைகள் பழங்காலம் தொட்டே இருந்து வருவதால் கார்த்திகை தீபத்திருநாளில் பேரூர் படித்துறையில் விளக்குகளை ஏற்றி நொய்யல் ஆற்றை வழிபட்டதாகத் தெரிவித்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Karthigai Deepam, Local News, Tamil News