முகப்பு /கோயம்புத்தூர் /

விபத்தை ஏற்படுத்திவிட்டு எஸ்கேப்... கோவையில் அரசு பேருந்து 2வது முறையாக ஜப்தி..

விபத்தை ஏற்படுத்திவிட்டு எஸ்கேப்... கோவையில் அரசு பேருந்து 2வது முறையாக ஜப்தி..

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

Coimbatore News | கடந்த 2018ம் ஆண்டு கோவை உக்கடம் சிக்னல் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த சதீஷ் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  • Last Updated :
  • Coimbatore, India

விபத்தை ஏற்படுத்திவிட்டு முழு இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் தாமதித்த அதிகாரிகளால் கோவையில் இரண்டாவது முறையாக அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது பட்டதாரி மகன் சதீஷ் (வயது 24) கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். வீட்டில் இருந்தே தினமும் பைக்கில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த 2018ம் ஆண்டு கோவை உக்கடம் சிக்னல் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த சதீஷ் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க :  தென்காசி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரம்மாண்ட புத்தர் கோவில்..

சதீஷின் குடும்பத்தினர் கோவை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டார். ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விபத்துக்கான உரிய இழப்பீட்டு தொகை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ.16 லட்சம் வழங்க கோரி மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டார். ஆனாலும் இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. இதனிடையே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ரூ.7.40 லட்சம் இழப்பீடு தொகையை வழங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மீதமுள்ள தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்குவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், மாதங்கள் ஓடியும் முழுமையான இழப்பீட்டுத் தொகையை வழங்காத காரணத்தினால் அதே அரசு பேருந்து 2-வது முறையாக மீண்டும் ஜப்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Coimbatore, Local News