முகப்பு /கோயம்புத்தூர் /

மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ.. நேரில் ஆய்வு செய்த கோவை ஆட்சியர்..

மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ.. நேரில் ஆய்வு செய்த கோவை ஆட்சியர்..

காட்டுத் தீயை நேரில் ஆய்வு செய்த கோவை ஆட்சியர்

காட்டுத் தீயை நேரில் ஆய்வு செய்த கோவை ஆட்சியர்

Coimbatore News : கோவை மாவட்டம் நாதே கவுண்டன்புதூர் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறையை அடுத்த நாதே கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயில் ஏற்கனவே சுமார் 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் எரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து வனத்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிலையில் காட்டுத் தீ பரவி வரும் அப்பகுதியில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தீ விபத்து நடந்த இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தீயை அணைக்கும் பணிகள் குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜிடம் கேட்டறிந்து ஆலோசனைகளையும் வழங்கினார்.

    First published:

    Tags: Coimbatore, Local News