முகப்பு /கோயம்புத்தூர் /

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

X
புற்றுநோய்

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

Cancer Awareness : கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்திய மருத்துவர் சங்கம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் துரைக்கண்ணன், செயலாளர் கோசல் ராம் மற்றும் நிர்வாகிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியானது கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாசாணிக் மருத்துவமனை முன்பு தொடங்கி ஜே.டி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் தனியார் நர்சிங் கல்லூரிகளில் பயிலும் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இவர்கள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர். அப்போது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களிடையே வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இந்த பேரணியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Coimbatore, Local News