முகப்பு /கோயம்புத்தூர் /

பென்சில் டிராயிங் முறையில் உயிரோவியங்கள் வரைந்து அசத்தும் கோவை இளம்பெண்!

பென்சில் டிராயிங் முறையில் உயிரோவியங்கள் வரைந்து அசத்தும் கோவை இளம்பெண்!

X
ஓவியங்கள்

ஓவியங்கள் வரைந்து அசத்தும் இளம்பெண்

Coimbatore News : பென்சில் டிராயிங் முறையில் உயிரோவியங்களை வரைந்து அசத்தி வருகிறார் கோவையை சேர்ந்த காது கேளாத வாய் பேச இயலாத இளம் பெண்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்துல்லா மற்றும் அனீஸ்பாத்திமா தம்பதியருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் என 3 பேர் உள்ளனர். இதில் மூத்த மகள் அப்ரா சாலிகா. இவருக்கு பிறவியிலேயே காது கேட்காது மற்றும் வாய் பேச முடியாது. இதனை ஒரு குறையாகவே பொருட்படுத்தாத அப்ரா சாலிகாவின் பெற்றோர் தங்கள் மகளுக்கு எதில் ஆர்வமோ அதனை ஊக்குவித்து அன்பு பாராட்டி வளர்த்தனர்.

மேலும் கேட்பது பேசுவது என ஓசைகள் மட்டுமே ஒருவரை சாதிக்க வைக்க இயலும் என்பதை மாற்றி கண்களால் காண்பதை ஓவியங்களாக வரைந்து அதற்கு உயிரூட்டி அசர வைக்கிறார் இந்த பெண். தன்னம்பிக்கையுடன் பென்சில் ட்ராயிங் முறையில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் ஓவியங்களை தீட்டுகிறார் இவர். ஒருவரது புகைப்படத்தை அவரது செல்போனுக்கு அனுப்பினால் அதனை சில நிமிடங்களில் காகிதத்தில் நகல் எடுத்தது போல் ஓவியமாக வரைந்து விடுகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில், “சிறுவயதிலிருந்து ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்த அப்ரா சாலிகா தற்போது மிகவும் தத்ரூபமாக ஓவியம் வரைந்து வருகிறார்” என கூறினர். இவரது முயற்சிகளுக்கு தங்களால் இயன்ற வரை ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் தனக்கு மிகவும் உறுதுணையாக தனது பெற்றோர்கள் இருந்து வருவதா அப்ரா சாலிகா சைகை மொழியில் தெரிவித்தார்.

    First published:

    Tags: Coimbatore, Local News