கோவை மாவட்டத்தை பொருத்தவரையில் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பின் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்கு பிறகு வீடு திரும்பினர்.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. சில சமயங்களில் குறைந்தும் அதிகரித்தும் கொரோனா காணப்படுகிறது.
மேலும், பொது இடங்களில் நடமாடும் மக்கள் விழிப்புணர்வுபோடு இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம், கிரிமி நாசினி, பொது இடைவெளி உள்ளிட்டவைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோயம்புத்தூரில் நேற்று மட்டும் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,35,590ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 187 போ் குணமடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 3,31,764 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 1,208 போ் சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 2,618 போ் கொரோனாவில்
உயிரிழந்துள்ளனா்.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.