முகப்பு /கோயம்புத்தூர் /

"ஹே எப்புட்றா" தண்ணீருக்குள் மிதந்தபடி 2 மணி நேரம் சிலம்பம்.. கோவை சிறுவன் அசத்தல்!

"ஹே எப்புட்றா" தண்ணீருக்குள் மிதந்தபடி 2 மணி நேரம் சிலம்பம்.. கோவை சிறுவன் அசத்தல்!

X
சாதனை

சாதனை படைத்த சிறுவன்

Coimbatore world record | கோவையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் தண்ணீருக்குள் மிதந்தபடியே 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.

  • Last Updated :
  • Coimbatore, India

தண்ணீருக்குள் நீண்ட நேரம் மிதப்பதை நாம் அனைவரும் பார்த்து வியந்திருப்போம். கோவையில் 11 வயது சிறுவன் இரண்டு மணி நேரமான தண்ணீரில் மிதந்தபடியே சிலம்பம் சுற்றியுள்ளார்.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தான ராஜா- ராஜேஸ்வரி தம்பதியினரின் மகன் ராஜமுனீஸ்வர் (11). தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள சிலம்பம் பள்ளியில் சேர்ந்துள்ளார். அதே பள்ளியில் நீச்சல் வகுப்பும் இருந்துள்ளது.

ராஜமுனீஸ்வர் நீச்சல் மீதும் ஆர்வம் காட்டுவதை அறிந்த அவரது பயிற்சியாளர், அவருக்கு நீச்சல் பயிற்சியும் அளித்துள்ளார். நீச்சல் கற்றுக் கொண்ட மாணவர் சிலம்பத்தை நீரில் இருந்தபடியே சுற்றியுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் வியப்படைந்ததோடு இதனை பயிற்சியாளருக்கும் தெரிவித்துள்ளனர்.

அவரது அறிவுறையின் பேரில் புதுவித சாதனையை படைப்பதற்கு மாணவர் முயன்றுள்ளார். அதன்படி மாணவர் ராஜமுனீஸ்வர் இரண்டு மணி நேரம் இடைவிடாது நீச்சல் குளத்தில் மிதந்தபடியே, நீச்சல் யுக்திகளை கையாண்டு ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை சுழற்றி சாதனை புரிந்துள்ளார்.

மாணவனின் இந்த சாதனையை அங்கீகரித்து இவருக்கு நோபல் வோர்ல்டு ரெக்கார் அச்சீவர் புத்தகத்தில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தண்ணீருக்கே தண்ணி காட்டிய மாணவன் ராஜமுனீஸ்வருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Coimbatore, Local News, World record