முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / காதலியின் கண்முன்னே காதலன் வெட்டிக்கொலை... பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்றபோது நடந்த பயங்கரம்..!

காதலியின் கண்முன்னே காதலன் வெட்டிக்கொலை... பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்றபோது நடந்த பயங்கரம்..!

விக்னேஷ்

விக்னேஷ்

Coimbatore | காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற இளைஞர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையை அடுத்த செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியில் நள்ளிரவில் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சென்ற இளைஞரை , உறவினர்கள் அரிவாளால் தாக்கியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். கூலித் தொழிலாளியான இவர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் இரு வீட்டிற்கும் தெரிந்த நிலையில் ஓராண்டு கழித்து திருமணத்தை வைத்துக் கொள்வது என பேசி இருந்தனர். இந்நிலையில் நேற்று 18 வயது பெண்ணுக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்து சொல்வதற்காக இரவு 12 மணி அளவில் பிரசாந்த் தனது நண்பர் குணசேகரன் மற்றும் அபிஷேக் ஆகியோருடன் குடிபோதையில் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டு காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்த அவர்கள், பெண்ணின்  வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். சப்தம் கேட்டு பெண்ணின் தந்தை மற்றும் தாய் மாமன் விக்னேஷ் ஆகியோர் வந்த போது,  குடிபோதையில் இருந்த பிரசாந்த் பெண்ணுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என கூறி போதையில் ரகளை செய்துள்ளார். அப்பொழுது பெண்ணின் தாய் மாமா விக்னேஷ்க்கும், பிரசாந்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்  வீட்டில் இருந்த அரிவாளால் அவர் பிரசாந்தை தாக்கினார்.

இதில் கழுத்து, தோல்பட்டை ஆகிய இடங்களில்  ரத்த காயம் ஏற்பட்ட நிலையில் பிரசாந்தை அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருசக்கர வாகனம் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்ட நிலையில் , 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரசாந்த்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் ,  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பிரசாந்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

மேலும் படிக்க... 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 40 வயது பெண் போக்சோவில் கைது.. நாகையில் அதிர்ச்சி..!

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த செட்டிபாளையம் காவல் துறையினர்,  18 வயது பெண்ணின்  தந்தை மற்றும் தாய்மாமா  விக்னேஷ் ஆகியோரை  கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Birthday, Coimbatore, Crime News, Lovers, Murder