சர்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3.03 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரை கைது செய்தனர்.
சார்ஜாவிலிருந்து நேற்று காலை கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கத்தை கடத்தி வந்த நான்கு பேரை அதிகாரிகள் பிடித்தனர்.
அவர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்டுகளிலும் உள்ளாடைகளிலும் மறைத்து வைத்து சுமார் 3.03 கிலோ தங்கத்தை கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.09 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், புதுக்கோட்டையை சேர்ந்த ஜியாவுதீன், மற்றும் சென்னையை சேர்ந்த சேஷ் முகமது என்ற இருவரை கைது செய்தனர்.
மேலும் படிக்க...விழுப்புரத்தில் சாதனை படைத்த 1000 பேர்..
இது தொடர்பாக மற்ற இருவரிடமும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Gold