கோவை மாவட்டத்தில் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தைப் பொருத்த வரையில் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பின் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்கு பிறகு வீடு திரும்பினர்.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. சில சமயங்களில் குறைந்தும் அதிகரித்தும் கொரோனா காணப்படுகிறது.
மேலும், பொது இடங்களில் நடமாடும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் முகக் கவசம், கிரிமி நாசினி, பொது இடைவெளி உள்ளிட்டவைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்ட அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,35,092 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை
பெற்று வந்த 180 போ் குணமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், 3,31,231
போ் குணமடைந்துள்ளனா். மேலும், 2,618 போ் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 1,243 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்தியாளர்: ராஜீவ்காந்த்.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.