மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாக பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. நடப்பு 2022-23 நிதியாண்டு வருகின்ற மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!
இதுவரை 1390 கோடி ரூபாய் சொத்து வரியாகவும், 412 கோடி ரூபாய் தொழில் வரியாகவும் வசூலிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31ம் தேதி கால அவகாசம் முடிவதற்குள் நிலுவையை செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் எனவும், நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்களின் சொத்துகள் சீல் வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai corporation, Property tax