சென்னை பள்ளிக்கரணையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் 13வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கரணை அடுத்த ரேடியல் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 13 மாடி உள்ள இந்த குடியிருப்பில் 9-வது தளத்தில் வசித்து வந்தவர் சம்பத் (வயது36). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுகன்யா (35) , ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று (22.03.2023) அதிகாலை 5 மணியளவில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், இறந்தவர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read : கொரோனாவில் இருந்து மீண்டார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.. மருத்துவமனை அறிக்கை..!
திருமணமாகி இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த சம்பத் திடீரென தற்கொலை செய்து கொண்டதிற்கான என்ன காரணம் அல்லது இது கொலையா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் - இசிஆர் ப.வினோத் கண்ணன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.