முகப்பு /செய்தி /சென்னை / சைடிஷ்-க்காக நண்பனை கொலை செய்த இளைஞர்... மது போதையில் அரங்கேறிய கொடூரம்...!

சைடிஷ்-க்காக நண்பனை கொலை செய்த இளைஞர்... மது போதையில் அரங்கேறிய கொடூரம்...!

கொலை

கொலை

Chennai | போலீஸார் தன்னை கைது செய்வதற்குள் சொந்த ஊரான பீகாருக்கு சென்று தப்பித்துவிடலாம் என நினைத்த முகமது அலி உடைமைகளோடு ரயிலில் புறப்பட்டார்.

  • Last Updated :
  • Chennai, India

சைடு டிஸ் தகராறில் சென்னையில் புலம்பெயர் தொழிலாளி கத்தியால் குத்தி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். ரயில் மூலம் பீகாருக்கு தப்ப முயன்ற கொலையாளியை போலீஸார் விஜயவாடாவில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது அசார் என்கிற பயில்வான். சென்னை பார்டர் தோட்டம் பகுதியில் உள்ள வெங்கடேசன் தெருவில் பிரியாணி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 23ஆம் தேதி இரவு புர்ரா சாஹிப் தெருவில் கழுத்து மற்றும் மார்பில் வெட்டு காயங்களுடன் முகமது அசார் சுய நினைவின்றி கிடந்தார்.

தகவலறிந்து சென்ற அசாரின் சகோதரர் முகமது கலாம், அங்கிருந்தவர்களின் உதவியுடன் அசாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது அசார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அண்ணாசாலை போலீசாருக்கு அது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு, முகமது அசாரின் உடல் அதே ராயப்பேட்டை மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிரியாணி கடையில் ஒன்றாக வேலை பார்த்த, குட்டு என்கிற முகமது அலியால் அசார் கொல்லப்பட்டது தெரிய வந்ததுள்ளது.

முகமது அசார், முகமது அலி இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒரே அறையில் தங்கி பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் நட்பாக பழகிய இருவருக்கும் அசாரின் நடவடிக்கையால் பகை உண்டானதாகத் தெரிகிறது. முகமது அலியை, அசார் அடிக்கடி கிண்டல் செய்து வெறுப்பேற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனால் நண்பர்களாக இருந்த இருவரும் எதிரிகளாக மாறியுள்ளனர். சம்பவத்தன்று வேலை முடிந்து அறைக்கு சென்ற பின்னர், சக நண்பர்களோடு சேர்ந்து முகமது அலி, அசாரும் மது அருந்தியுள்ளனர்.அப்போது, முகமது அலி வாங்கி வைத்திருந்த சைடிஸ்ஸை அசார் கேட்காமல் எடுத்து சாபிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்தவர், அசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்படிதான் எடுப்பேன், உன்னால் என்ன செய்ய முடியும் என வார்த்தையை விட சம்பவம் கொடூரத்தில் முடிந்தது.

ஆத்திரமடைந்த முகமது அலி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அசாரின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். அறையில் இருந்து வெளியே வந்த அசார் சாலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

போலீஸார் தன்னை கைது செய்வதற்குள் சொந்த ஊரான பீகாருக்கு சென்று தப்பித்துவிடலாம் என நினைத்த முகமது அலி உடைமைகளோடு ரயிலில் புறப்பட்டார். தலைமறைவானவரின் செல்போன் எண்ணை ட்ராக் செய்ததில் முகமது அலியின் அசைவுகள் வேகமாக இருந்ததால், அந்நேரத்தில் பீகார் சென்ற ரயிலில் சோதனையை தொடங்கினர்.

மேலும் படிக்க... சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள்... அதிகாரிகள் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னையை தாண்டி ரயில் பயணிப்பது உறுதியானதும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விஜயவாடாவில் ரயில் நின்றதும் இரண்டாம் வகுப்பில் பதுங்கியிருந்த முகமது அலியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரை சென்னை வரவழைத்து அசாரின் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் புலன்பெயர் தொழிலாளிகளுக்கு மோதல் ஏற்பட்டு கொலை நடந்தேறிய சம்பவம் சக தொழிலாளிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Bihar, Biriyani, Chennai, Crime News, Friendship, Murder