மருத்துவ கழிவுகளை குப்பையுடன் கொட்டிய தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தாம்பரம் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
தாம்பரம் மாநகராட்சிகுட்பட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகளை முறைப்படி பாய்லர் மூலம் அழிக்காமல் குப்பையில் வீசுவதாக புகார் எழுந்தது. இதனை கண்காணித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் இன்று ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள பிரபல மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தாம்பரம் மாநகராட்சி சுதாதாரத் துறை துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் தகுந்த ஆதாரங்களை திரட்டிய நிலையில், அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் அபராதம் கட்ட நோட்டிஸ் வழங்கப்பட்டது.
Also see... விஏஓ மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை - காஞ்சிபுரத்தில் பரபரப்பு
மேலும், இதுபோல் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் முதல் முறை அபராதமும் தொடர்ச்சியாக ஈடுபட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர்: சுரேஷ், சென்னை ஏர்போட்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Medical Waste