முகப்பு /செய்தி /சென்னை / ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்.. செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை..!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்.. செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை..!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சிகிச்சையில் உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.

  • Last Updated :

சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற்றார். இந்த நிலையில் கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

சிகிச்சையில் இருந்த அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இதயத்தில் ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

top videos

    கடந்த வாரம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

    First published:

    Tags: EVKS Elangovan