முகப்பு /செய்தி /சென்னை / கொரோனாவில் இருந்து மீண்டார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.. மருத்துவமனை அறிக்கை..!

கொரோனாவில் இருந்து மீண்டார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.. மருத்துவமனை அறிக்கை..!

மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த 15ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாகச் சென்னை அடுத்த போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதய ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இதய பிரச்சினையிலிருந்தும் அவர் மீண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், “ஈவிகேஎஸ் இளங்கோவன் MLA மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் பூரண நலமுடன் இருக்கிறார். நலம் பெற வாழ்த்திய அனைத்து நல்லுங்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ள தலைவர், அவர்கள் சிறிது ஓய்வுக்கு பின்னர் விரைவில் சட்டமன்ற பணிகளுக்கு திரும்ப ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.” என்றும் அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: EVKS Elangovan