முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் தொடர்ந்து பெய்யும் மழை... கோடை வெப்பம் தணிவதால் மகிழ்ச்சியில் மக்கள்..!

சென்னையில் தொடர்ந்து பெய்யும் மழை... கோடை வெப்பம் தணிவதால் மகிழ்ச்சியில் மக்கள்..!

சென்னையில் அதிகாலையில் மழை

சென்னையில் அதிகாலையில் மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் மீண்டும் மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் அதிகாலையில் கன மழை பெய்தது. வள்ளுவர் கோட்டம், புரசைவாக்கம், கொளத்தூர், வில்லிவாக்கம், சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, மயிலாப்பூர்  உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் அதிகாலையில் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 2 தினங்களுக்கும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெப்பம் நிலவி வரும் சூழலில் மக்கள் எதிர்பார்க்காத வகையில் திடீரென மழை பெய்வது, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Chennai, MET warning, Rain Update, Weather News in Tamil