சென்னையில் ரூ.535 கோடி பணத்துடன் சென்ற லாரி பழுதாகி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது.
சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 2 வாகனங்களில் 535 கோடி பணத்துடன் விழுப்புரம் வங்கிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தது. அப்போது தாம்பரம் அருகே ஒரு வாகனம் பழுதானதால் சித்த மருத்துவம் மருத்துவமனை எதிரே நிறுத்தப்பட்டது. உடனே இதுகுறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் வாகனம் பழுதான இடத்துக்கு சென்ற காவல்துறையினர் வாகனத்தை இழுவை வண்டி மூலம் அங்கிருந்து எடுத்து சித்தா மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு சென்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai