சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில் 7 வயது சிறுவன் பயிற்சியின் போது பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள ஹாஜி முகமது அப்பாஸ் தெருவை சேர்ந்தவர் ராகேஷ் குப்தா. இவரது 7 வயது மகன் தேஜா குப்தா. சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி குளத்தில் சிறுவன் கடந்த 10 நாள்களாக பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. சிறுவன் நேற்று மாலை 8 மணியளவில் தனது தாத்தாவுடன் நீச்சல் பயிற்சிக்கான வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி சிறுவன் பலியானான்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார் பயிற்சியாளர்கள் சுமன் மற்றும் செந்தில் ஆகியோர் மீது அஜாக்கிரதையாகச் செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் (304-a) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Also Read: சென்னையில் 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
கடந்த 13 நாட்களாகக் குழந்தையை நீச்சல் பயிற்சிக்காக அழைத்து வந்ததாகவும், உள்ளே பெற்றோருக்கு அனுமதி இல்லாததால் தான் வெளியில் இருந்ததாகவும், பயிற்சியாளர்கள் அஜாக்கிரதை காரணமாகத் தனது மகன் இறந்துவிட்டதாகவும் உயிரிழந்த 7 வயது சிறுவனின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.