குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சொல்லும் உபயோகமான தகவல்களை இதில் பார்க்கலாம்.
இதுகுறித்து செங்கல்பட்டை சேர்ந்த பல் மருத்துவர் பிரகாஷ் கூறுகையில், “இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுத்தால் கண்டிப்பாக பல் தேய்க்க வேண்டும். இல்லையென்றால் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி பண்ணாமல் விட்டால் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பற்களில் சொத்தை ஏற்படும். எனவே புட்டி பால் குடித்தவுடன் குழந்தைகள் தங்களது பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அது மட்டுமல்லாமல் காலையில் பல் துவக்கும் விஷயம் எப்படி முக்கியமான ஒன்றோ, அதேபோல் இரவும் பல் துவக்க வேண்டும். காலையில் பல் துவக்கிய பிறகே குழந்தைகளுக்கு பால் பிஸ்கட் போன்றவற்றை வழங்க வேண்டும். ஏனென்றால் இரவு முழுவதும் வாய்கள் தாடைகள் அசைவு இல்லாமல் இருக்கும். இதனால் வாயின் உள்ளே இருக்கும் பற்களில் தாடைகளில் பாக்டீரியா அதிக அளவில் இருக்கும். இதனால் காலை மாலை என இருவேளையும் பல் துவக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Health, Lifestyle, Local News