செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அருள்மிகு ஶ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ காளதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாகம் அடையாளம் காட்டிய சிவஸ்தலங்களில் ஒன்று என்று நம்பப்படுகிறது. இங்கிருக்கும் இறைவன் பெயர் காலத்தீஸ்வரர் ஆகும். இந்த திருத்தலம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என சொல்லப்படுகிறது.
இந்த திருத்தலத்தில் காலத்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த காலத்தீஸ்வரர் ஆலயத்தில் சர்ப்பதோஷ (நாக தோஷம்) பரிகார பூஜை நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் ராகு கேது பகவானுக்கு பரிகார பூஜைகள் செய்யக்கூடிய ஸ்தலம் என்பதால் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பரிகார பூஜையில் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த பரிகார பூஜை செய்த பிறகு நாகதோஷம் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தோஷம் நீங்கி திருமணம் தடையில்லாமல் நடைபெறும் என காளத்தீஸ்வரர் மீது நம்பிக்கை வைத்து பரிகார பூஜை செய்து வருவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் செல்கின்றனர்.
இறுதியாக நாகதோஷ பரிகார பூஜை செய்த பக்தர்களுக்கு மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News