செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெறும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் பிரதி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை நடத்த மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியர் உத்தரவின் படி இந்த மாதத்திற்கான விவசாயிகள் கூட்டம் வரும் 20.04.2023 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை விட்டு அமர்ந்து, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News, Mask