முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / பாமக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை... மறைமலைநகரில் பயங்கரம்!

பாமக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை... மறைமலைநகரில் பயங்கரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

chengalpattu murder | மனோகரன் தனது சகோதர்களோடு சேர்ந்து சொந்தமாக ஜேசிபி இயந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வருகிறார்.

  • Last Updated :
  • Chengalpattu, India

மறைமலைநகர் அருகே பா.ம.க நிர்வாகி மர்மகும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர்  அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மகன் மனோகரன் (32

இவர் தனது சகோதர்களோடு சேர்ந்து சொந்தமாக ஜேசிபி இயந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்திற்கு முன்பு மறைமலைநகர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். அவ்வபோது  கொண்டமங்களம் ஊராட்சி அலுவலகத்தை கடக்கும் போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த  3 பேர் கொண்ட மர்மகும்பல் மனோகரனை தாக்க முயன்றபோது செய்வதறியாது தப்பித்து சாலையில் அங்குமிங்கும் ஓடியுள்ளார்.

பின்பு அருகில் உள்ள மாட்டுக்கொட்டகையில் ஓடி பதுங்கிக் கொண்டார். அவரை விரட்டி சென்ற மர்மநபர்கள் மனோகரன் மாட்டு கோட்டகையில் பதுங்கி இருப்பதை கண்டதும் சற்றுநேரத்தில் மனோகரனை அரிவாளால்  சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மனோகரன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

top videos

    செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.

    First published:

    Tags: Chengalpattu, Crime News, Local News, Murder, PMK