நம்மில் பலர் தங்களின் கனவு வீட்டை கட்டவோ அல்லது வாங்கவோ வீட்டுக் கடன் வாங்கி இருப்போம். அதை விரைவாக கட்டி முடிக்க நாம் முயற்சித்தாலும், கடனின் காலம் மற்றும் வட்டி காரணமாக நாம் நீண்ட காலமாக வீட்டுக்கடனுக்கு EMI செலுத்திக் கொண்டிருப்போம். இந்நிலையில், பெரும்பாலான வங்கிகள் மற்றும் NBFC-கள் முன்பணம் செலுத்தும் வசதியை வழங்குகின்றன.
வீட்டுக் கடன் என்பது நீண்ட காலக் கடன் என்பதால் வங்கிகள் மற்றும் சில நிதி உதவி நிறுவனங்களுக்கு அதில் நல்ல வருமானம் கிடைக்கும். எனவே, பல நிறுவனங்கள் கடன் தொகையை முன்கூட்டியே செலுத்துவதற்கு சில கட்டணங்களையும் விதிக்கின்றன. ஆனால், இந்த கட்டணத்தை அனைவரும் செலுத்த வேண்டியதில்லை.
அப்படி உங்களை செலுத்த கூறினால், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 2.5 சதவீதம் உயர்த்தியுள்ளது என்று சொல்லுங்கள். அதன் பிறகு பல வங்கிகள் எம்சிஎல்ஆரை உயர்த்தியுள்ளன. இது வீடு மற்றும் வாகன கடன்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 1 ஆண்டுக்கு முன்பு வீட்டுக் கடனுக்காக 7 சதவீத வருடாந்திர வட்டி செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு 9.5 சதவீதமாக வட்டி அதிகரித்துள்ளது.உங்கள் வீட்டுக் கடனை விரைவில் முடிக்க விரும்பினால் அல்லது அதன் சுமையை குறைக்க விரும்பினால், இந்த ஸ்மார்ட் வழியைப் பின்பற்றவும்...
கடந்த சில வருடங்களில் உங்கள் வருமானம் அதிகரித்து, சேமிப்பு அதிகரித்து இருந்தால், கடனில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தலாம். இது உங்கள் கடனின் அசல் தொகையைக் குறைக்கும். அதனுடன் வட்டிப் பொறுப்பும் குறையும். வட்டியாக செல்லும் தொகையை குறைப்பதன் மூலம், உங்கள் மீதான ஒட்டுமொத்த சுமை குறையும்.
முன்பணம் செலுத்தினால் கட்டணம் விதிக்கப்படுமா?
பல வங்கிகள் சுமார் 2% முன்கூட்டியே செலுத்தும் கட்டணத்தை விதிக்கின்றன. ஆனால், எல்லோரும் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. மிதக்கும் விகிதத்தில் (floating rate) கடன் வாங்குபவர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், வீட்டுக் கடன் நிலையான விகிதத்தில் இருந்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்படலாம். வீட்டுக் கடன் வாங்குபவர்கள் பல வழிகளில் முன்கூட்டியே செலுத்தலாம்.
Also Read | வட்டி உயர்வு… முதியோருக்கான திட்டங்களில் சூப்பர் சேமிப்பு.. DCB வங்கியின் அறிவிப்புகள்!
உங்கள் வருமானம் அதிகரித்திருந்தால், உங்கள் EMI-ஐ அதிகரிக்கலாம். இதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். மறுபுறம், நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிலையான தொகையை முன்கூட்டியே செலுத்தலாம். நீங்கள் ஆண்டு முழுவதும் சேமித்தால் அல்லது போனஸைப் பெற்று, வீட்டுக் கடனை விரைவாகச் செலுத்த அதைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் இந்த முறையைப் பின்பற்றலாம்.
குறுகிய காலத்திற்கு கடன் வாங்கவும்
உங்கள் கடனைக் குறைக்க கடனின் காலத்தை குறுகியதாக வைத்திருக்கிறீர்கள். நீங்கள் 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு கடன் வாங்கினால், உங்கள் EMI கண்டிப்பாக குறைவாக இருக்கும். ஆனால், ஒட்டுமொத்த கடனுக்கான வட்டி இரட்டிப்பாகும். குறுகிய காலக் கடன் என்றால் நீங்கள் குறைந்த வட்டியைச் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும், முன்பணம் செலுத்தவும் முடியும். முன்பணத்தை அதிகரிப்பது, உயரும் வட்டி விகிதங்களைச் சமாளிக்க உங்கள் வீட்டுக் கடனைக் கட்டமைக்க உதவும். முன்கூட்டியே அதிக பணத்தை வைப்பதன் நன்மை என்னவென்றால், நீங்கள் குறைந்த வீட்டுக் கடனை எடுக்க வேண்டியிருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.