முகப்பு /செய்தி /வணிகம் / விவசாயிகளுக்கு ரூ.2000.. 14 வது தவணைத் தொகை எப்போது கிடைக்கும்..? இதோ முழு விபரம்!

விவசாயிகளுக்கு ரூ.2000.. 14 வது தவணைத் தொகை எப்போது கிடைக்கும்..? இதோ முழு விபரம்!

பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டம்

பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டம்

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.2 ஆயிரம் என 3 தவணைகளாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமத்து மக்களின் பிரதானத் தொழிலாக உள்ளது விவசாயம். அயராது உழைத்து நாட்டு மக்களின் வளங்களைப் பாதுகாக்கும் நம் விவசாயிகளின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கும் விதமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பி.எம் கிசான் திட்டத்தை நடமுறைக்கு கொண்டு வந்தது.

அதாவது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜான என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத் திறனை ஆதரிக்கும் வகையில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், மாதம் ரூ.2 ஆயிரம் என 3 தவணைகளாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை மத்திய அரசின் கீழ் 13 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எப்போது 14 வது தவணைத் தொகை வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில் விவசாயிகள் காத்துள்ளனர்.

Read More : வட்டி உயர்வு… முதியோருக்கான திட்டங்களில் சூப்பர் சேமிப்பு.. DCB வங்கியின் அறிவிப்புகள்!

ஆனால் இதற்கான அறிவிப்பு தேதி இன்னமும் உறுதியாகவில்லை. இருந்தப்போதும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிக்கையின் படி, 14 வது தவணைத் தொகையானது வருகின்ற மே 26 ஆம் தேதி முதல் மே 31 ஆம் வரை எந்த நேரத்திலும விநியோகிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

top videos

    PM கிசான் யோஜனா பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்ப்பது?: 

    விவசாயிகள் வருமான சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் சட்டப்பூர்வ சொத்து ஆவணங்களைக் காட்டி தகுதியுள்ள விவசாயிகள் பிஎம்.கிசான் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
    இதுப்போன்ற ஆவணங்களின் அடிப்படையில் தகுதியுள்ள விவசாயிகள், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தால் உங்களது பெயர் இந்த லிஸ்டில் வந்துள்ளதா? என்பதை இதோ இந்த முறையைப் பயன்படுத்தி சரிபார்க்க முடியும்.
    முதலில் நீங்கள் PM Kisan Yojana இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in/ என்ற பக்கத்திற்குள் செல்ல வேண்டும்.
    இதையடுத்து நீங்கள் பயனாளிகளின் பட்டியலுக்குச் சென்று உங்களது மாநிலம், பெயர் மற்றும் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் உள்ளீடு செய்தால் பொதும். உங்களது பெயர் PM கிசான் யோஜனா பட்டியலில் வந்துள்ளதா? என்பதை நீங்கள் எளிதில் தெரிந்துக் கொள்ள முடியும்.
    யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது ஏன்றால் ஏதாவது ஒரு நிறுவனம் வைத்திருக்கும் நில உரிமையாளர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் விவசாய குடும்பங்கள், மத்திய அல்லது மாநில அரசில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் யாரும் பி.எம் கிசான் திட்டத்தில் சேர்த்து பயனடைய முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
    First published:

    Tags: Business, Farmer