முகப்பு /வணிகம் /

குறைந்த செலவில் அதிக லாபம் கொடுக்கும் பந்தல் காய்கள்.. விளக்கும் விழுப்புரம் விவசாயி!

குறைந்த செலவில் அதிக லாபம் கொடுக்கும் பந்தல் காய்கள்.. விளக்கும் விழுப்புரம் விவசாயி!

X
குறைந்த

குறைந்த செலவில் அதிக லாபம் கொடுக்கும் பந்தல் காய்கள்

Villupuram News | விழுப்புரம் அடுத்து பாணாம்பட்டு  பகுதியில் 35 சென்ட் நிலப்பரப்பில்  பாகற்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார் விவசாயி சிவா.  பாகற்காய்களை பலவிதமான பந்தல் அமைப்புகளில் பயிரிட்டு சாகுபடி செய்து லாபம் பார்த்து வருகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் சந்தைகளில் பந்தலில் விளையும் காய்கறிகளுக்கு நல்ல மவுசு கூடி உள்ளது. விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளில் விவசாயிகள் பந்தல் காய்கறிகளான புடலை பாகற்காய் பீர்க்கங்காய் சுரைக்காய் போன்ற சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் எடுத்து பாணம் பட்டு பகுதியை சேர்ந்த சிவா என்ற விவசாய தன்னோட 35 சென்டு நிலத்தில் பாகற்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். இவர் பாகற்காய்களை முக்கோண பந்தல், தட்டாரப் பந்தல்,போன்று மூன்று வகைகளில் பயிரிட்டு வருகிறார்.

பாகற்காய் விதைகளை பாலூர் விதை பண்ணையில் வாங்கி, அதனை பயிரிட்டு இரண்டு மாத அறுவடை முடிந்து மூன்றாவது மாதம் அறுவடையை விவசாயி சிவா தொடங்கியுள்ளார். பயிர் செய்த இரண்டு மாதத்தில் பாகற்காயில் மட்டும் 65 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்த்து உள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விவசாயி சிவா மேலும் கூறுகையில், “பாகற்காய் தற்போது நல்ல விளைச்சல் தந்து நல்ல லாபத்தையும் தந்துள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 கிலோ வரை அறுவடை செய்கிறோம் அறுவடை செய்யப்படும் காய்கறிகளை நேரடியாக உள்ளூர்களில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதால் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.

top videos

    அதுமட்டுமல்லாமல் விழுப்புரம் சந்தைகளிலும் விற்பனை செய்து வருகிறோம். சந்தைகளில் காய்கறிகளை 20 ரூபாய் முதல் 25 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கின்றனர். பாகற்காய் மூன்று மாத பயிராகும். 2 மாதத்திலேயே குறுகிய இடத்தில் அதிக லாபத்தை தந்துள்ளது இந்த பாகற்காய் சாகுபடி. பல்வேறு பந்தல் வடிவமைப்புகளை கொண்டு பயிர் செய்து வருகிறேன், இதனால் வேலை ஆட்களின் செலவு மிச்சம் ஆகிறது. விவசாயிகள் நிச்சயமாக பந்தல் சாகுபடி முறையில் காய்கறிகளை பயிரிட்டு நல்ல மகசூல் பெற்று நல்ல வருமானத்தை பார்க்க முடியும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் விவசாயி சிவா.

    First published:

    Tags: Agriculture, Local News, Money18, Villupuram