முகப்பு /செய்தி /வணிகம் / விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு... வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு..!

விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு... வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு..!

வேளாண் பட்ஜெட்

வேளாண் பட்ஜெட்

வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 -24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (21.03.2023) சட்டசபையில் தாக்கல் செய்தார். வேளாண் துறை மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெற்பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு மட்டும், ஐந்து லட்சம் ரூபாய் பரிசினை அரசு வழங்கி வருகிறது. தற்போது நெல்லுக்கு வழங்கி வந்ததை, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றிற்கும் வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் ஆண்டு முதல் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Also Read : ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு... வேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..!

மேலும், உணவு தானியப் பயிர்கள் உற்பத்தி, உற்பத்தித் திறனில் சிறந்து விளங்கும் களப் பணியாளர்கள், வட்டார அலுவலர்கள், மாவட்ட அலுவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Agriculture, Farmers, TN Budget 2023