தேனி மாவட்டத்தில் பெரும்பாலான நபர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காமல் போவதால் அவ்வப்போது சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தேவைக்கு அதிகமாக விளைபொருட்கள் உற்பத்தியாகும் பொழுது அதனை வீணடிக்காமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் தொழில்நுட்பத்தை விவசாயிகள் தற்போது கற்றுள்ளனர். விளைவித்த பொருள் வீணாகாமல் தடுப்பதற்கு வாழைக்காய், கொய்யா காய், உலர்திரட்சை, வெற்றிலை, மாங்காய், ஏலக்காய், இஞ்சி, தக்காளி என பல பொருட்களில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
விளைபொருளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பொழுது பொருள்களை நன்றாக சூரிய ஒளியில் காய வைக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த தேவையை சோலார் உலர்த்தி பூர்த்தி செய்து வருகிறது. சோலார் உலர்த்தி மூலம் பொருட்களை காய வைக்கும் பொழுது விரைவாகவும், சுகாதாரமான முறையிலும், உரிய நேரத்திலும் பொருட்களை காய வைக்க முடியும் என்பதால் சோலார் உலர்த்தியின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சிறிய அளவிலான சோலார் உலர்த்தியிலிருந்து பெரிய அளவிலான சோலார் உலர்த்தி வரை சந்தையில் உள்ளன. விவசாயிகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நபர்கள் தங்களுக்கு தேவைக்கு ஏற்றார் போல் சோலார் உலர்த்தியை வாங்கிக் கொள்கின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டார பகுதிகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நபர்கள் அதிகம் சோலார் உணர்த்தியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதற்காக தனியாக சோலார் உலர்த்தி தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கம்பம் பகுதியைச் சேர்ந்த சுகுமார்.
இதையும் படிங்க : 28 மாநிலங்களின் உணவுகள் ஒரே இடத்தில்..! கோவையில் பிரம்மாண்ட உணவுத்திருவிழா..!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Theni