முகப்பு /வணிகம் /

பருத்தி விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? கவலையில் விழுப்புரம் விவசாயிகள்..

பருத்தி விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? கவலையில் விழுப்புரம் விவசாயிகள்..

X
மாதிரி

மாதிரி படம்

Villupuram Farmers : பருத்தி விலை வீழ்ச்சிக்கான காரணத்தை கூறும் விழுப்புரம் விவசாயிகள்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்யும் விளைபொருட்களை மூட்டைகளாக கட்டிக்கொண்டு சரக்கு வாகனம், டிராக்டர்கள் மூலமாக விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு நெல், உளுந்து, மணிலா, தானிய பயிர்களுக்கு அடுத்ததாக பருத்தி வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே இங்கு பருத்தி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஒரு நாளைக்கு 600 மூட்டைகள் வரை பருத்தி வரத்து வருகிறது. இவற்றை எடைபோட்டு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ எடை கொண்டது) ரூ.8 ஆயிரம் முதல் ரூ.8,500 வரை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழியர்கள் கூறுகையில், “மற்ற ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை காட்டிலும் இங்கு விலை அதிகம் வைக்கப்படுவதால் வெளிமாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பலர், விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் பருத்தி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது தினமும் 600 மூட்டைகள் முதல் 750 மூட்டைகள் வரை வரத்து உள்ளது. தொடர்ந்து, இனி வரக்கூடிய நாட்களிலும் பருத்தி வரத்து அதிகரித்து காணப்படும்” என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பருத்தியின் விலை குறைவாக இருக்கிறது. சென்ற ஆண்டு 10,000 க்கும் மேலே விலை போன பருத்தி இந்த ஆண்டு 8,000 திற்கு தான் விலை போகிறது. அரசாங்கம் பருத்திக்கு ஒரு நிர்ணயம் விலை தீர்மானிக்க வேண்டும் என விவசாயிகள் வியாபாரிகள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Agriculture, Local News, Villupuram