முகப்பு /business /

மரவள்ளியில் மாவு பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி? நாமக்கலில் இலவச பயிற்சி!

மரவள்ளியில் மாவு பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி? நாமக்கலில் இலவச பயிற்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal News : நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 11ம் தேதி மரவள்ளியில் ஒருங்கிணைந்த முறையில் மாவுப்பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெறுகிறது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மோகனூர்ரோட்டில், கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியில் நிலையத்தில் வரும் 11ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மரவள்ளியில் ஒருங்கிணைந்த முறையில் மாவுப்பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இந்த பயிற்சியில் தற்போது நிலவி வரும் தட்பவெப்ப சூழ்நிலையில், மரவள்ளி பயிர்களைத் தாக்கும் மாவூப்பூச்சிகள், அதன் வாழ்க்கை சுழற்சி மற்றும் புதிய ஒட்டுண்ணிகளைக் கொண்டு மாவூப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை முறையில் பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர்கொல்லிகளைக்கொண்டு ஒருங்கிணைந்த முறையில்மரவள்ளியில் மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்துதல் குறித்து தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம்உள்ளவிவசாயிகள்முன்பதிவு செய்து கொள்ள 04286 266345, 266650 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மரவள்ளியில் மாவு பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி?

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பயிற்சிக்குபதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Agriculture, Local News, Namakkal