முகப்பு /வணிகம் /

காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு சொன்ன ஆட்சியர்!

காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு சொன்ன ஆட்சியர்!

காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம் ஆட்சியர்

Kanchipuram collector announcement | காஞ்சிபுரத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 28.04.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை10.30 மணிக்கு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 28.04.2023 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் கலெக்டர்தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும்,பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள 13வது தவணைத் தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் E-KYC மூலம் பி.எம்.கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம்.

ALSO READ | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமானுஜர் திருஅவதார உற்சவம்!

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (one time password) பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொதுசேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல்ரேகையை பதிவு செய்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதிசெய்யலாம்.

உங்களதுகைபேசியில்வைத்து உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் E-KYC எனும் பக்கத்திற்கு சென்ற ஆதார் எண்ணைஉறுதி செய்யலாம்.

எனவே, பி.எம்.கிசான் தவணைதொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணைஉறுதி செய்திடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்கேட்டுக்கொண்டார்.

மேலும், விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவுகள் மேற்கொள்ள ஆதார் அட்டை நகல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா ஆவண நகல் ஆகியவற்றுடன் கலந்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி,தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Agriculture, Kanchipuram, Local News