துபாயிலிருந்து தனது குழந்தைகளின் காது குத்தும் விழாவிற்கு வருகை புரிய இருந்த கணவர் மாரடைப்பால் இறந்ததால் உடலை விழுப்புரம் கொண்டு வர உதவ வேண்டும் என குழந்தைகளுடன் கண்ணீர் மல்க விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மனு அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் வசித்து வந்த ஜோசப் தமிழரசன் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக துபாய் அபுதாபியில் எமிரேட்ஸ் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் ஜெனரல் ஹெல்பராக பணி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது குழந்தைகளின் காது குத்தும் விழாவிற்கு குவைத்திலிருந்து விமானம் மூலம் தாயகம் திரும்ப ஆயத்தமானார். தந்தை வருவார் என்ற மகிழ்ச்சியில் குழந்தைகளும் எதிர்பார்ப்பில் மனைவியும் இருக்க திடீரென பேரிடியாய் ஒரு அழைப்பு ஒன்று வந்தது.
விதை விற்பனை - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
பிறந்து 50 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் வீசி கொலை.. இளம்பெண் விபரீத முடிவு - வரதட்சணை கொடுமையா? போலீஸ் விசாரணை
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு
தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்தால்போதும்.. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் சொன்ன தகவல்..
விழுப்புரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா
தென்பெண்ணை ஆற்று திருவிழாவை கொண்டாட விழுப்புரத்தில் குவிந்த 3 மாவட்ட மக்கள்
விழுப்புரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்
ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. விழுப்புரத்தில் சோகம்!
கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு - விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
“உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு
ஆற்றாத பெருந்துயரில் ஆழ்ந்த மனைவி கணவர் உடலை இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று என கோரி அவரது மனைவி எழிலரசி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோகன் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மஸ்தானுக்கு இந்த கடிதத்தை பரிந்துரை செய்து விரைந்து உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகமே சோகத்தில் மூழ்கியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Dead body, Local News, Viluppuram S22p13