PREVNEXT
முகப்பு / செய்தி / விழுப்புரம் / கோழிகளுக்கு பரவும் ராணிகட்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்..

கோழிகளுக்கு பரவும் ராணிகட்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்..

Villupuram Chicken Farmers | விழுப்புரம் மாவட்டத்தில் கோழிகளுக்கான இருவார தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என  மாவட்ட ஆட்சியர்  மோகன்  தகவல்.

கோழி வளர்ப்போருக்கு முக்கிய அறிவிப்பு

கோழி வளர்ப்போருக்கு முக்கிய அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கோழி வளர்ப்போருக்கு முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ராணிகட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் நோயை கட்டுப்படுத்தி அதன் மூலம் கோழி வளர்ப்போருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் இருவார தடுப்பூசி முகாம்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நடத்தப்படுகின்றன.

அதுபோலவே இவ்வாண்டும் எதிர்வரும் 01.02.2023 முதல் 14.02.2023 வரை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது. எனவே,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோழிகளை வளர்க்கும் அனைத்து பொதுமக்களும் இந்த முகாம்களில் கலந்துகொண்டு தங்களது கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதனால் கோழிகளில் வெள்ளைக்கழிச்சல் நோயின் காரணமான இறப்பினை தவிர்த்து,கோழி வளர்ப்பில் அதிக லாபம் பெறலாம். மேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி விபரம் பெற்று பயனடையலாம்” என தெரிவித்துள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் - பொதுமக்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் விழிப்புணர்வு..

மரக்காணம் அருகே ரூ.25 கோடியில் பறவைகள் சரணாலயம்.. மகிழ்ச்சியில் விழுப்புரம் மக்கள்!

தென்பேர் கிராமசபை கூட்ட தீர்மானத்தை ஏற்று டாஸ்மாக் கடையை இடமாற்றுவதாக உறுதியளித்த விழுப்புரம் ஆட்சியர்..

விழுப்புரத்தில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!

இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரத்தில் 100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தக திருவிழா!

சிறுவர்களுக்கு பிடித்த பாட்ஷா பாய் பெட் ஷாப்.. எங்கு இருக்கு தெரியுமா?

மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில்.. விழுப்புரத்தில் எளியமுறையில் செய்முறை பயிற்சி!

கோடை வெயிலால் எலுமிச்சை விலை அதிகரிப்பு.. விழுப்புரம் விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? - விழுப்புரம் கலெக்டர் விளக்கம்

Tags:Local News, Villupuram

முக்கிய செய்திகள்