ஆதரவற்ற குழந்தைகளை தற்காலிக குடும்ப சூழல்களில் வாழ வழிவகை செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை தற்காலிக குடும்ப சூழல்களில் வாழ வழிவகை செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குழந்தைகள் பாதுகாப்பினை உறுதிப்படுத்திடும் மிசன் வட்சாலயா(Mission Vatsalya) திட்டத்தின் முக்கிய அம்சமான தற்காலிக பராமரிப்பு (Faster Care) செயல்படுத்திட தற்காலிக பராமரிப்புக்கான (Foster Care) வழிகாட்டு நெறிமுறைகள் 2015-ன்படி ஆதரவற்ற குழந்தைகளை குடும்பச் சூழலில் வளர்வதற்கு ஏற்றச் சூழலை உருவாக்கிட வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் தேவைப்படுகிறது.
சொந்த குழந்தைகள் உள்ளோர், தத்தெடுப்பிற்கு பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் என யார் வேண்டுமானாலும் உரிய நடைமுறைகளை பின்பற்றி வளர்ப்பு பராமரிப்பு பெற்றோராக குழந்தைகளை வளர்க்கலாம், வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் பெற்றோர்களால் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில்
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை பண்ணுங்க..! விழுப்புரம் சித்த மருத்துவரின் கோடைக்கால டிப்ஸ்..!
விழுப்புரத்தில் பள்ளி வாகனங்கள் திடீர் ஆய்வு.. என்ன காரணம் தெரியுமா?
கள்ளச்சாராய வேட்டை எதிரொலி - விழுப்புரத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்தது..!
விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய வள்ளலார் பக்தர்கள்..
விழுப்புரத்தில் விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 22 பேர்...
விழுப்புரத்தில் ராஜராஜன் காலத்து சுரங்க அறை, கல்வெட்டு கண்டுபிடிப்பு..!
திமுகவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தம்பியின் பதவி பறிப்பு... இதுதான் காரணம்... பின்னணி தகவல்கள்..!
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி.. கொதிக்கும் குழம்பை மனைவி மீது ஊற்றிய கொடூர கணவர்!
தந்தையை இழந்த நிலையில் தேர்வை எழுதிய விழுப்புரம் மாணவி பள்ளியில் 2ம் இடம் பெற்று சாதனை!
“எங்க அம்மாவுக்கு வேலை தாங்க..” விழுப்புரம் கலெக்டரிடம் மனு கொடுத்த சிறுமி!
காதிகிராப்ட் மூலம் பனை பொருட்கள் விற்பனை.. விழுப்புரத்தில் கலெக்டர் தொடங்கி வைத்தார்..
உள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இன்றி தவிக்கும் குழந்தைகளை குறுகிய காலம் அல்லது குழந்தைக்கு 18 வயது முடியும் வரை வளர்ப்பு பெற்றோருடன் இருக்க அனுமதி வழங்கப்படும்.
மேற்படி, ஆதரவற்ற குழந்தைகளை தற்காலிக குடும்ப சூழல்களில் வாழ வழிவகை செய்ய தேவைப்படும் பெற்றோர்கள் விண்ணப்பங்கள் மற்றும் நிபந்தனைகள் நடைமுறைகளை,
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் 04146-290659 என்ற எண்ணில் தொடர்புக்கொண்டோ அல்லது dcpuvpm1@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரிலோ தொடர்புக்கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்” என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Local News, Villupuram