விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், தென்பேர் ஊராட்சியில், உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஆறுமுறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அதில் இந்த ஆண்டு முதன் முறையாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கிராம சபை கூட்டத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொருவரும் நீரை பாதுகாத்தல், நீரினை சிக்கனமாக பயன்படுத்துதல், அனைத்து வீடுகளிலும் மழைநீர் கட்டமைப்புகளை உருவாக்குதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்தல், பாரம்பரிய நீர்நிலைகளை புனரமைத்தல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஊராட்சிகளில் உள்ள நீர் நிலைகளை கணக்கெடுத்தல், விவசாயப் பணிகளுக்கு சொட்டு நீர் பாசனங்கள் பயன்படுத்துதல், சமூக காடுகள் உருவாக்குதல் போன்ற திட்டச் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதே ஆகும்.
விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய வள்ளலார் பக்தர்கள்..
“எங்க அம்மாவுக்கு வேலை தாங்க..” விழுப்புரம் கலெக்டரிடம் மனு கொடுத்த சிறுமி!
மாற்றுத்திறனாளிகளுக்கு எலக்ட்ரிக் பைக் வழங்கிய விழுப்புரம் ஆட்சியர்!
விழுப்புரத்தில் பள்ளி வாகனங்கள் திடீர் ஆய்வு.. என்ன காரணம் தெரியுமா?
காதிகிராப்ட் மூலம் பனை பொருட்கள் விற்பனை.. விழுப்புரத்தில் கலெக்டர் தொடங்கி வைத்தார்..
விழுப்புரத்தில் ராஜராஜன் காலத்து சுரங்க அறை, கல்வெட்டு கண்டுபிடிப்பு..!
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை பண்ணுங்க..! விழுப்புரம் சித்த மருத்துவரின் கோடைக்கால டிப்ஸ்..!
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி.. கொதிக்கும் குழம்பை மனைவி மீது ஊற்றிய கொடூர கணவர்!
கள்ளச்சாராய வேட்டை எதிரொலி - விழுப்புரத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்தது..!
திமுகவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தம்பியின் பதவி பறிப்பு... இதுதான் காரணம்... பின்னணி தகவல்கள்..!
விழுப்புரத்தில் விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 22 பேர்...
அதன் அடிப்படையில்,தென்பேர் ஊராட்சியில், 1,330 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நிறைவேற்றப்பட்டது. அதோடு இந்த கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனை உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டதோடு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்ற உறுதியையும் மக்களுக்கு அளித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கிராம சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மகிழ்ச்சியில் ஊர் மக்கள் கலைந்து சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Local News, Villupuram