PREVNEXT
முகப்பு / செய்தி / விழுப்புரம் / விமான நிலைய வாடிக்கையாளர் சேவை பயிற்சி - விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

விமான நிலைய வாடிக்கையாளர் சேவை பயிற்சி - விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

Villupuram District | விமான நிலைய வாடிக்கையாளர் சேவை பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

விமான நிலையம்

விமான நிலையம்

விமான நிலைய வாடிக்கையாளர் சேவை பயிற்சி குறித்து, விழுப்புரம் ஆட்சியர் மோகன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விழுப்புரம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி. ஏவியேஷன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்த பயிற்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் பயிற்சி பெற 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 18 வயது முதல் 25 வயது உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? - விழுப்புரம் கலெக்டர் விளக்கம்

விழுப்புரத்தில் 100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தக திருவிழா!

கோடை வெயிலால் எலுமிச்சை விலை அதிகரிப்பு.. விழுப்புரம் விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!

சிறுவர்களுக்கு பிடித்த பாட்ஷா பாய் பெட் ஷாப்.. எங்கு இருக்கு தெரியுமா?

மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில்.. விழுப்புரத்தில் எளியமுறையில் செய்முறை பயிற்சி!

விழுப்புரத்தில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு

மரக்காணம் அருகே ரூ.25 கோடியில் பறவைகள் சரணாலயம்.. மகிழ்ச்சியில் விழுப்புரம் மக்கள்!

ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் - பொதுமக்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் விழிப்புணர்வு..

தென்பேர் கிராமசபை கூட்ட தீர்மானத்தை ஏற்று டாஸ்மாக் கடையை இடமாற்றுவதாக உறுதியளித்த விழுப்புரம் ஆட்சியர்..

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பயிற்சிக்கான கால அளவு 3 மாதமும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத்தொகையான ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும். இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் ஏஏஎஸ்எஸ்சி (AERO SPACE SKILL SECTOR COUNCIL) -யால் அங்கீரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

Must Read : சிலிர்ப்பூட்டும் சின்னக் கல்லாறு அருவி... ஒரு என்ஜாய் ட்ரிப் போகலாம்!

பயிற்சியை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான Indigo Airlines, Spice Jet, Go first, Vistra, Air India போன்ற புகழ்வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரிய நூறு சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:Airport, Local News, Villupuram

முக்கிய செய்திகள்