PREVNEXT
முகப்பு / செய்தி / திருச்சி / திருச்சி அருகே புண்டரீகாஷப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

திருச்சி அருகே புண்டரீகாஷப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Trichy News | திருவெள்ளறை புண்டரீகாஷப் பெருமாள் பிரம்மோத்ஸவ விழாவில்  திருத்தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறையில் அமைந்துள்ளது புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயில். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலின் உபகோயிலான இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 6 வது திவ்ய தேசமாக விளங்கும் இத்தலம் ஸ்வதேகிரி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் பிரமோத்ஸவ விழாவானது மார்ச் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கண்ணாடி அறையிலிருந்து பெருமாள் தாயார் புறப் பாடாகி திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து (திருச்சி)

சேலத்திற்கு சவால் விடும் 'ஸ்ரீரங்கத்து மாம்பழம்' விற்பனையிலும் சாதனை!

பள்ளி திறப்பு தள்ளிப்போகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன அப்டேட்

சட்டையில் கேமரா.. குற்றங்களை தடுக்க திருச்சி காவல்துறைக்கு நவீன கேட்ஜெட்ஸ்..

ஆஸ்திரேலிய பறவைகளின் அட்டகாசம் நம்ம திருச்சியில்..! இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!

தென் திருப்பதிக்கு செல்ல ஆபத்தான சாலையில் "ரிஸ்க்" எடுக்கும் பக்தர்கள்!

திருச்சியில் குட்கா, பான்மசாலா விற்பனை.. 5 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்!

ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கும்..! மீன் வளர்ப்பில் அசத்தும் திருச்சி பொறியியல் பட்டதாரி..! 

நாளைக்குள் அனுப்பிடுங்க.. விளையாட்டு துறையில் சாதிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!

அகிலா யானைக்கு 21வது பிறந்தநாள்... கொண்டாடி மகிழ்ந்த கோயில் பக்தர்கள்!

இறந்துபோன 3 வயது குழந்தைக்கு கோயில் கட்டி திருவிழா.. நாட்டார் தெய்வ வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?

மண் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் : ஊராட்சி தலைவர் உட்பட 3 பேர் கைது

தொடர்ந்து திருத்தேரானது நிலைக்கு வந்தடைந்தது. இந்நிகழ்வில் ஜீயபுரம் டி.எஸ்.பி பாரதிதாசன் மேற்பார்வையில் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் காவலர்கள் , ஊர்காவல் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி தலைவர் லதா கதிர்வேலு மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Tags:Car Festival, Local News, Trichy

முக்கிய செய்திகள்