PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / நடுக்கடலில் மிதந்த மர்ம படகு.. போதைப்பொருள் கடத்தலா? - 6 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்

நடுக்கடலில் மிதந்த மர்ம படகு.. போதைப்பொருள் கடத்தலா? - 6 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்

Drug smuggling | குஜராத்தில் சமீபத்தில் சுமார் ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நடுக்கடலில் பறிமுதல் செய்யப்பட்ட படகு

நடுக்கடலில் பறிமுதல் செய்யப்பட்ட படகு

போதை பொருள் கடத்தல் தொடர்பாக  நடுக்கடலில் வைத்து 6 பேரை பிடித்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்  அவர்களது படகை பறிமுதல் செய்தனர்.

அண்மை காலங்களாக குஜராத் மாநிலத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் பிடிப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 200 கடல் மைல் தொலையில் மர்ம படகை சுற்றி வளைத்தனர்.பின்னர் படகில் சோதனை நடத்தியபோது அதில் போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

படகில் இருந்த 6 பேரை பிடித்து தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். குஜராத்தில் சமீபத்தில் சுமார் ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 5,799 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிப்பு

மாநகராட்சி பள்ளிக்கு திடீர் விசிட்.. மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட தூத்துக்குடி எஸ்.பி.பாலாஜி

வாகைக்குளம் சுங்கச்சாவடி தொடர்பாக நீதிபதிகள் கடும் அதிருப்தி

ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு.. தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மக்கள் குற்றச்சாட்டு..

வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி - தூத்துக்குடி விவசாயிகள் கவலை

சாகச விளையாட்டுக்களுடன் வெளிநாடு போல மாறப்போகும் தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரை..!

அரசு பள்ளியில் பட்டியலின பெண் உணவு சமைத்ததற்கு எதிா்ப்பு - நியூஸ்18 எதிரொலியாக நேரில் ஆய்வு செய்த அமைச்சர்!

அம்மா உணவக சாப்பாட்டில் அரணை - தூத்துக்குடியில் அதிர்ச்சி

இன்ஸ்டாவில் அரிவாளுடன் ரீல்ஸ் வீடியோ.. நடத்துனரை தட்டித்தூக்கிய போலீஸ்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்... தூத்துக்குடியில் பரபரப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு... செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...

பின்னர் மேல் விசாரணைக்காக அவர்கள் 6 பேரும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகு, தருவைகுளம் கொண்டு வரும் வழியில் தரைதட்டி மணலில் சிக்கியது. அதனை மீட்கும் பணி நடந்து வருகிறது.

செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

Top Videos
  • பாதமே சரணம்.. நாமக்கல்லில் உருவமின்றி பாதங்களை மட்டும் வைத்து வழிபடும் வினோதம்!
  • Tags:Local News, Smuggling, Thoothukudi

    முக்கிய செய்திகள்